எந்தவொரு விசாரணையிலும் தலையிடோம்..! அதிகாரிகளுக்கு அநுர வழங்கும் சுதந்திரம்
மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக தனிநபர்களைக் கைது செய்வதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் பொலிஸ் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, சில சட்ட ரீதியான அதிகாரிகள் தங்களுக்கு அழுத்தங்களை வழங்காத அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை வழக்குகளை மறைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
அத்தகைய அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து குறுகிய காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எதிர்க்கட்சி குழுக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கான அடிப்படைக் கொள்கை கட்டமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri