முக்கிய கைதுகள் தொடர்பில் அநுர தரப்பின் இரகசிய கலந்துரையாடல்கள்
இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர(Aruna Jayasekara) தெரிவித்துள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு இந்த ஆட்சியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யோஷிதவின் கைது
யோஷிதவை(Yositha Rajapaksa) கைது செய்வது தொடர்பில் நேற்று முன்தினம் பேசப்பட்டதாகவும் இந்த விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோஷிதவை கைது செய்வது போதுமானதல்ல என தற்பொழுது விமர்சனங்கள் வெளியிடப்படும் மற்றுமொருவரை கைது செய்யுமாறு கோரப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் எவரைக் கைது செய்வது என்றாலும் சரியான சட்ட விதிகள் பின்பற்றி கைது செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தக்கவைக்கப்படும் ஆட்சி
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்று நடந்து கொள்ள முடியாது சரியான முறையில் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாத காலத்தில் எம்மால் இவர்களை கைது செய்ய முடியாவிட்டாலும் இதனை கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை விடவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல மடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும் என அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam