ரணிலைக் கைவிடுமா மொட்டு! சாகர விளக்கம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக்கொள்வது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (08.05.2023) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன்தான் தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு
எமது கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டால்தான் எமது கட்சியால் தீர்மானமொன்று எடுக்கப்படும்.
எனினும், ஜனாதிபதி அவ்வாறு செயற்படவில்லை. அரசில் இருந்து வெளியேறுவதற்கான தேவையும் எமது கட்சிக்கு எழவில்லை என தெரிவித்துள்ளார்.