இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

United Nations Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Government
By Thileepan Apr 01, 2023 06:23 AM GMT
Report

தமிழர்களைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்காத இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது இனவாதம் திரும்பியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் 52ஆவது அமர்வில்  'இனவாதம்' தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Government Has Turned Racism Against Muslims

இனரீதியான நிலைப்பாடு

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், திட்டச் செயற்பாட்டுக்கான டேர்பன் பிரகடனத்தின் 79ஆவது பந்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

இனத்துவ பாகுபாட்டினைக் களைதல் மற்றும் இனத்துவ சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றில் உள்ள தடைகள், அரசியல் விருப்பு இன்மை, பலவீனமான சட்டங்கள், சட்டத்தினை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் நாடுகளிடம் காணப்படும் மூலோபாயக் குறைபாடுகள் ஆகியவற்றிலேயே முதன்மையாகத் தங்கியிருக்கிறது என நாம் உறுதியாக நம்புகிறோம்.

அதுபோன்று  நாடுகளில் காணப்படும் இனரீதியான நிலைப்பாடு, இனங்களை எதிர்மறையான வகைப்படுத்தலுக்கு உள்ளாக்குதல் போன்றவையும் இந்நிலைக்கு காரணமாக அமைகின்றன.

இலங்கையில் உள்ள நிலவரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மெய்யாக்குகிறது.

இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Government Has Turned Racism Against Muslims

இனரீதியான பாகுபாட்டு

1948இல் நாடு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்டுக் கொண்டதன் பின், மாறிமாறி வரும் அரசாங்கங்கள் இனத்துவ அடிப்படையிலும் இனத்துவ பாகுபாட்டுடனான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றன.

இவ்வரசாங்கங்கள் தமிழ் மக்கள் விடயத்தில் எதுவித சகிப்பதன்மையுமின்றி, இலங்கைதீவில் அவர்கள் தனித்துவமான ஒரு தேசமாக வாழ்வதனை கட்டமைப்பு ரீதியாக சிதைத்து அழிப்பதனையே குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Government Has Turned Racism Against Muslims

தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட போது, இலங்கை அரசாங்கங்கள் தாம் கடைப்பிடித்துவரும் இனரீதியான பாகுபாட்டுடனான நிலைப்பாடு மேற்கொண்டு வரும் இனவழிப்பு சார்ந்த நடவடிக்கைகள் மீதான கவனத்தைத் திசை திருப்பி தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் தமிழ் மக்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களாகவும் காட்டின.

இலங்கை முஸ்லிம்கள்

இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Government Has Turned Racism Against Muslims

2009இல் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டமானது இனவழிப்புடன் முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டதன் காரணமாக, எதிர்த்து நிற்கும் ஆற்றலை தமிழ் மக்கள் இழந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் திருப்தியடைந்துள்ளது.

தமிழர்களைப் போலன்றி, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்காத இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது இனவாதத்தைத் திருப்பியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Government Has Turned Racism Against Muslims

இது தொடர்பில் மேலதிகமான ஆதாரங்கள் வேண்டுமெனில், மக்களை அடிமைப்படுத்தும் வகையிலான சமகால நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் விடயத்திற்கு பெறுப்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி, இலங்கை மலையகத்தில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் இவ்வாறு நடத்தப்படுவதாக தமது முடிவுரையில் கூறியிருக்கிறார்.

எனவே இலங்கை அரசாங்கம் என்ற புற்றுநோயை எதிர்கொள்வதற்கு எப்போது இந்த உலகம் விழித்துக் கொள்ளும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US