சாரா உயிரிழப்பு தொடர்பில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளும் அறிக்கை வேண்டும் என கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜெஸ்மின் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
சாரா கொல்லப்பட்டதாக அறிக்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் சாரா கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனினும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை, அந்த திணைக்களத்தின் முன்னைய அறிக்கைகளுக்கு முரணானது என்பதை சிறில் காமினி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிப்பு
எனவே, இதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாக்குதலின் பின்னர் சாரா ஜெஸ்மின் இந்தியாவுக்கு தப்பிச்சென்று
விட்டதாக இதுவரை சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இறந்துவிட்ட செய்தி
வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
