வற் வரியை குறைக்க மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள யோசனை
வற் வரி செலுத்த வேண்டியவர்கள் அதிகம் பங்களிப்பதன் மூலம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வற் வரி அறவிடும் சதவீதத்தைக் குறைக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09.01.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வற் வரி சதவீத குறைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், வற் வரி செலுத்துபவர்கள் அனைவரும் வரி கோப்புக்களை வைத்திருந்தால் மற்றும் வற் வரி செலுத்தும் ஒவ்வொரு வியாபாரிகளும் தாம் செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்தினால், கிடைக்கப் பெறும் வருமான அதிகரிப்பினூடாக வற் வரி செலுத்த வேண்டிய சதவீதத்தை குறைக்க முடியும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உரிய தகவல்களை உடனடியாக அறிவிக்கும் முறைமையொன்றை ஆரம்பித்து இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
