வற் வரியை குறைக்க மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள யோசனை
வற் வரி செலுத்த வேண்டியவர்கள் அதிகம் பங்களிப்பதன் மூலம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வற் வரி அறவிடும் சதவீதத்தைக் குறைக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09.01.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வற் வரி சதவீத குறைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், வற் வரி செலுத்துபவர்கள் அனைவரும் வரி கோப்புக்களை வைத்திருந்தால் மற்றும் வற் வரி செலுத்தும் ஒவ்வொரு வியாபாரிகளும் தாம் செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்தினால், கிடைக்கப் பெறும் வருமான அதிகரிப்பினூடாக வற் வரி செலுத்த வேண்டிய சதவீதத்தை குறைக்க முடியும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உரிய தகவல்களை உடனடியாக அறிவிக்கும் முறைமையொன்றை ஆரம்பித்து இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
