அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியாது! மதுர விதானகே
தமது அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றின் பிரகாரம் விஜயன் நாட்டுக்கு வந்த போது குவேணி ஆடை நெய்து கொண்டிருந்தார் என கூறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியும் அரசாங்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியானது ஏனையவர்களினது உள்ளாடைகளை அணிவதுடன், பெண்கள் அணியும் ஆடைகளை அணிவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக உள்ளாடைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் அதிகளவு கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam