அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியாது! மதுர விதானகே
தமது அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றின் பிரகாரம் விஜயன் நாட்டுக்கு வந்த போது குவேணி ஆடை நெய்து கொண்டிருந்தார் என கூறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியும் அரசாங்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியானது ஏனையவர்களினது உள்ளாடைகளை அணிவதுடன், பெண்கள் அணியும் ஆடைகளை அணிவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக உள்ளாடைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் அதிகளவு கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri