காணிகளை விற்று வாழும் சந்திரிக்கா
காணிகளை விற்று வாழ்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்ட போது வங்கிக்கணக்கு மேலதிக பற்று நிலையில் காணப்பட்டது. இதுவரையில் காணிகளை விற்பனை செய்தே வாழ்க்கை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து தமக்கு எதுவும் கிடைக்கப்பெறுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒன்பது ஆண்டுகளாக தமது ஓய்வூதியத்தை இடைநிறுத்தியிருந்ததாகவும், தம்மிடம் இருப்பதை ஏனையவர்களுக்கு வழங்கியுள்ளமே தவிர யாருடைய பணத்திளும் நாம் உணவு உண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களும் தேவை
தனது பணியாளர்களுக்கு தாமே சம்பளம் கொடுப்பதாகவும் , மின்சாரக் கட்டணம், நீர்க்கட்டணம் என்பனவற்றை தாமே செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் தமக்கு வீடு ஒன்றும், நான்கு வாகனங்களும், வழங்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஓர் ஜீப்பும், காரும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இரண்டு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்களும் தேவை என்றால் அவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் எனவும், பஸ்ஸில் பயணம் செய்வதை தாம் வெட்கமாக கருதவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
