தேரர்களின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்! அரசாங்கம் நடவடிக்கை
பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து, தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்ட 'தர்ம நீதிமன்றம்'கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
புராதன மன்னர் காலங்களில் பௌத்த தேரர்கள் தொடர்பான விவகாரங்களை 'சங்காதிகரணய' எனும் நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாகவே கையாளப்பட்டிருந்தது.
அரசாங்கம் நடவடிக்கை
தற்போது பொது நீதிமன்றங்களில் பௌத்த தேரர்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுவதன் காரணமாக மகாசங்கத்தினருக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டு வருவதாக மகாநாயக்க தேரர்கள் அண்மைக்காலமாக சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

அதனைக் கருத்திற் கொண்டே பௌத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டு, தேரர்களுக்கான தனி நீதிமன்றக் கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது.