ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை நடைபெற்ற ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறப்பினர் குணதிலக்க ராஜபக்ச கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதலை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |