லண்டனில் திறக்கப்பட்டுள்ள “கோட்டாகோகம“ கிளை (PHOTOS)
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ எனும் கிளையொன்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் அரசுக்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக்கோரியும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ எனும் பகுதியை உருவாக்கி பதாகைகளை காட்சிப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் 22ஆவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு ‘கோட்டா கோ கிராமம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன்,கூகுள் வழிகாட்டலிலும் அந்த பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
