கோட்டாபய, ரணில் மீது காட்டிய கோபம்!
நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி கோட்டாபய, ரணில் விக்ரமசிங்க மீது கோபத்தை வெளிப்படுத்தினார்? என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான போராட்டம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து “கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள்” என்ற செய்தி மிக தீவிரமடைந்தது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஏந்தியவாறு கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்ற சபையின் ஒரு பக்கத்திலிருந்து அவற்றை காட்சிப்படுத்தினர்.
எந்தவொரு ஜனாதிபதி சந்திக்காத அவமானம்

கோட்டா கோ ஹோம் என்று கோஷமிட்டனர். சில அடி தூரத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அருகில் அமர்ந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதனை அதிர்ச்சியுடன் அவதானித்தார்.
அவரால் வெட்கத்தை மறைக்க முடியவில்லை. கடந்த காலங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் தமது கண் முன்னே இப்படியான அவமானத்தை சந்தித்ததில்லை. 1991 செப்டெம்பர் மாதம் பதவி நீக்க பிரேரணையை எதிர்கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கூட, இவ்வாறான அவமானத்தை சந்திக்கவில்லை.
திவாலான நாடு

இந்த தருணத்தில், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் இலங்கை "திவாலான நாடாக" பங்கேற்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
முந்தைய பேச்சுவார்த்தைகளை விட மிகவும் கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார், இதன்போது, பொருளாதார குழப்பத்துக்கு காரணமான, ஜனாதிபதி கோட்டாபய, தனது தலையை உயர்த்தி விக்கிரமசிங்கவின் முகத்தை அவ்வப்போது பார்க்கிறார்.
அவரது வெளிப்பாடுகளை நன்கு அறிந்தவர்கள் அவர், மற்றவர் மீது இவ்வாறே கோபத்தை வெளிக்காட்டுவார் என்று தெரிவித்துள்ளனர்.
வெளிப்பட்டது கோபம்

அன்று செவ்வாய்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு சற்று தாமதமானது.
ஹர்ஷன ராஜகருணா மற்றும் நளின் ஜயமஹா உள்ளிட்ட அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டதாக அவரிடம் தெரிவித்தனர்.
எதிர்கட்சியினராகிய தங்கள் அதிருப்தியை அவரிடம் காட்டாமல் அவரை செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கூறினர். சஜித் பிரேமதாச புன்னகை செய்தார்,
இதனை ஒப்புதலின் அடையாளமாக எடுத்துக் கொண்டு, அவசர அவசரமாக போராட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. அவர்களை அமைதிப்படுத்த முடியாத சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். "கோட்டா கோ ஹோம்" என்ற கோஷம் சிறிது நேரம் தொடர்ந்தபோது, அரசாங்க கட்சியினர் மத்தியில் குழப்ப மனநிலை, வெளிப்படையாகத் தெரிந்தது.
ஜனாதிபதி ராஜபக்சவை பாதுகாக்க எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வரவில்லை. சில நிமிடங்களில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இருக்கையிலிருந்து எழுந்து, தனது கோட்டின் விளிம்பை சரிசெய்து,முன்னால் சென்று, வெளியே சென்றார். எனினும் அவர் சபைக்கு மீண்டும் திரும்பவே இல்லை.
You My Like This Vido
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri