கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan protests Gota Go Home 2022 Sri Lankan political crisis
By Chandramathi Aug 19, 2022 04:04 PM GMT
Chandramathi

Chandramathi

in கட்டுரை
Report

ஒரு நாடு உலக அளவில் தனது சிறப்பான ஆட்சி முறையின் ஊடாக பிரசித்தி பெற்ற வரலாறுகளை இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் முறியடித்துவிட்டார்கள். இன்று சர்வதேச அளவில் பேசுப் பொருளாக இலங்கை மாறியுள்ளது. ஆனால் யாரும் அதன் ஆட்சி முறையை பின்பற்ற போவதில்லை.

மகிந்தவின் அரசியல் வருகையுடன் இலங்கை அரசியலில் ராஜபக்சர்களின் ஆட்சி நங்கூரமிடப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்தார். பின்னர் தனது பாரியாருடன் அமெரிக்கா சென்றார். அங்கு சாதாரணமான வேலைகளை செய்து வந்தார்.

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

இதனை தொடர்ந்தே மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக பதியேற்றார். இதன் பின்னரே மீண்டும் கோட்டாபய ராஜபக்ச தனது பாரியாருடன் இலங்கைக்கு வருகை தந்தார்.

உள்நாட்டு போரில் ஈடுபட்டு பெருபான்மை மக்களின் ஆதரவை பெற்று ராஜபக்சர்கள் இலங்கை அரசியலில் வெற்றி நடைபோட்டனர். அவ்வப்போது அரசியல் சரிவுகளை எதிர் நோக்கினாலும் ராஜபக்சர்கள் தளர்ந்துவிடவில்லை. இதுவரை காலமும் ராஜபக்சர்களுக்கான ஆதரவு நீடிப்பது கசப்பான உண்மையே.

7ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

இவ்வாறான அரசியல் நகர்வுகளின் பெரும் திருப்பு முனையாகவே 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச அடியெடுத்து வைத்தார்.

உள்நாட்டு போரில் சிறுபான்மையினரிடம் இருந்து நாட்டை மீட்டவர் நம் எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த பெருபான்மையின் நாயகனாக கோட்டாபய உருவெடுத்தார்.

ஆரம்பத்தில் நாயகனாக வளம் வந்தவரின் ஆட்சியின் சில காலங்களிலே என்றும் காணாத இன்னல்களை நாட்டு மக்கள் அனைவரும் அனுபவித்தனர். இன்னல்களை வழங்குவதில் இன,மத,பேதத்தை வெளிக்காட்டாமை அவரின் பெருந்தன்மையாகவே பார்க்க வேண்டும்.

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

சாதாரணமாக ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி மக்களின் பெரும் புரட்சியை உருவாக்கும் அளவிற்கு மோசமடைந்தது. உணவு பொருட்கள் தட்டுபாடு, எரிவாயு மற்றும் எரிபொருள் என ஆரம்பித்தவை பெரும் பஞ்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாற்றமடைந்தது. இதனால் பாதிப்படையாத துறைகளே இல்லை. வரிசைகள் நீண்டன.மக்களின் வாழ்க்கை ஆதிகாலத்தை நோக்கி நகர்ந்ததென்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் பொறுமையிழந்த மக்களின் போராட்டம் வெடித்தது.மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பி சென்று பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

யார் இந்த அயோமா ராஜபக்ச?

இவ்வாறு அரசியலில் முடிவை நோக்கி நகர்ந்த ராஜபக்சர்களின் அரசியல் நகர்வுகளில் சாதாரண குடும்ப பெண்ணாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கணவரின் நிழலாக நகர்ந்த இலங்கையின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்ற அயோமா ராஜபக்ச தற்போது ஆராயப்பட வேண்டிய ஒருவராவார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அயோமா ராஜபக்ச சாதாரண குடும்ப பெண்ணாகவே தனது வாழ்க்கையை நகர்த்தியுள்ளார். மனோஜ் ராஜபக்ச என்ற தனது மகனின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு நல்ல தாயாகவும், தனது கணவரை பராமரித்துக்கொள்ளும் சிறந்த மனைவி என்ற குறுகிய வட்டத்திற்குள்ளே தனது வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

அரசியலிலோ, சமூக செயற்பாட்டிலோ அல்லது வேறு துறைகளிலோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத அயோமா ராஜபக்ச சாதாரண ஒரு பெண்ணின் மனநிலையுடன் செயற்பட்டமையால் இன்று பேசு பொருளாக மாறியுள்ளார்.

ஆம்! இலங்கையை விட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று, அங்கு அவர் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மனைவி அயோமா ராஜபக்சவின் குடியுரிமையைக் கொண்டு தான் மீண்டும் அமெரிக்காவில் குடிபுகும் திட்டத்தில் கோட்டாபய இறங்கியுள்ளார்.

அகதியான கோட்டாபய

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

நாடு விட்டு நாடு அகதியை போன்று அலையும் கோட்டாபயவை அரசியல் தரப்பினர் பலரும் கேலி செய்த வண்ணம் தகவல்களை வெளியிட்டனர்.

செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கிய கோட்டாபயவிற்கான ஒரே ஆறுதல் அவரது மனைவியின் அமெரிக்க குடியுரிமையாகும்.

இத்தனை வருட அரசியல் பயணத்தில் எத்தனை இடங்களில் அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு பயணித்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதுவரையில் அயோமா ராஜபக்ச தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவலாக ஊடகங்கள் பதிவிட்ட பதிவுகள் காண்பதற்கரிய காட்சிகளாகவே உள்ளன.

அயோமா ராஜபக்ச பற்றிய பதிவு

இந்நிலையில் சற்று தீவிரமாக ஆராய்ந்தோமானால் கோவிட் காலங்களில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது. இதன்போது ஊரடங்கு சட்டங்கள் விதிக்கப்பட்டு வெளியில் செல்வதற்கு சில சட்ட திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த கால கட்டத்தில் அயோமா ராஜபக்ச சாதாரண பெண்களை போன்று வீட்டு தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்த காணொளி ஒன்று சிங்கள் ஊடகங்களில் பதிவிடப்பட்டு பரவலாக பேசப்பட்டது.

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

ஆனால் இன்று அனைத்து ஊடங்களிலும் கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக பார்க்கப்படுகிறார். பரவலாக பேசபடுகிறார். இதுவரை காலம் என்ன நடந்தாலும் கணவனுடன் சேர்ந்து பயணித்தவர் இப்போது கணவரை பற்றி பேசும் இடங்களில் எல்லாம் தனது பெயரையும் பதித்துவிட்டார்.

தம்மை அடையாளப்படுத்துவதற்கு மாபெரும் சக்திகளோ, உலகை வியக்க வைக்கும் திறன்களோ தேவையில்லை, பெண்கள் பெண்மையுடன் நடந்துகொண்டாலே போதுமானது என்பதை இங்கு அயோமா வலியுறுத்தியுள்ளார்.

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

மறைமுகமாக நிகழ்ந்தாலும் பெண் அடிமைத்தனங்கள் எப்போதோ முறியடிக்கப்பட்டுவிட்டன. அனைத்து துறைகளிலும் தம்மை அடையாளப்படுத்தி பெண்கள் பெரும் சக்திகளாக எப்போதோ மாறிவிட்டனர்.

இந்நிலையில் ஒரு நாட்டின் முதல் பெண்மணியாக இருந்த அயோமா, தனது அமெரிக்க குடியுரிமையை பயன்படுத்தி தனக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு அமெரிக்கா சென்றிருக்க முடியும். ஆனால் அத்தனைக்கு பிறகும் இக்கட்டான சூழ்நிலையில் தனது கணவருடன் பயணிக்க வேண்டும் என்று அவர் எடுத்த தீர்மானமே இன்று கோட்டாபயவின் பாதுகாப்பு அஸ்த்திரமாக மாறியுள்ளது.

காலத்தின் கையில் கோட்டாபயவின் முடிவு

கோட்டாபயவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அஸ்த்திரமாக மாறிய பெண்! | Gotabaya Rajapaksa Come Back Srilanka Ioma America

ஒரு மனிதன் எவ்வளவு அநியாயங்கள் செய்திருந்தாலும் அவனை நேசிப்பவர்களின் நற்செயல்களால் அவன் சில காலம் பாதுகாக்கப்படலாம் என்பது காலத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கை.

எத்தனையோ வரலாறுகள் பார்த்து விட்டோம், பெண்களால் அழிந்த ஆட்சியும் உண்டு, காப்பாற்றப்பட்ட கணவர்மார்களும் உண்டு.

இலங்கை வரலாற்றில் மனைவியின் உரிமையால் பாதுகாக்கபட்டு கோட்டாபய அவரின் குடும்பத்துடன் இணைந்து வாழ்வாரா அல்லது மக்களின் சாபங்களால் துரத்தப்பட்டு மீண்டும் இலங்கை வந்து அழிவுக்கான பாதையை வகுப்பாரா என்பது காலத்தின் கையிலே உள்ளது. 

மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, இராமநாதபுரம்

19 Mar, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, மட்டக்களப்பு

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US