ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் ஜேர்மனியில் ஒரு மணிநேரத்திற்கான ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணிநேரத்திற்கு 12 யூரோவாக உயர்த்துவது, அதிபர் Olaf Scholz மற்றும் அவரது சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களில் ஒன்றாககும்.
இது குறித்து ஜேர்மன் தொழிலாளர் அமைச்சர் Hubertus Heil கருத்து தெரிவிக்கையில்,
குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் ஜேர்மனியின் தேசியப் பொருளாதாரம் உண்மையில் நீண்ட காலத்திற்கு அதிக உற்பத்தித் திறன் பெறுவதற்கு வழிவகுக்கிறது.
கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஊழியர்கள் மற்றும் பாரம்பரியமாக மிகக் குறைந்த ஊதியம் உள்ள சேவைத் தொழில்களில் பணிபுரியும் பெண்கள் பயனடைய வேண்டும்.
ஊதிய உயர்வு மசோதாவை வெள்ளிக்கிழமையன்று மற்ற அமைச்சரவைக்கு அனுப்பியதை உறுதிப்படுத்தியது.மேலும் சமூக ஜனநாயகக் கட்சியின் கூட்டணி கட்சிகள் இதை எதிர்க்கமாட்டார்கள்.
பெப்ரவரி மாதத்தில் மத்திய அமைச்சரவையில் இந்த மசோதா குறித்து விவாதிப்போம்.
பின்னர், ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும், எனவே அக்டோபர் 1ம் திகதி குறைந்தபட்ச ஊதியம் 12 யூரோக்களாக உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan