உயர்தரப் பரீட்சைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
உயர்தரப் பரீட்சைகளை எழுதி முடித்த மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று(24) முன்மொழிந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், நல்ல இசையைக் கேட்பதற்கும், கடற்கரைகளைப் பார்வையிடுவதற்கும், கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு நடவடிக்கை
“இளைய தலைமுறையினர் அடுத்தகட்ட வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விடயத்தைப் பற்றி நான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன்,” என்று அவர் கூறினார்.
இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
