பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட தங்கங்கள்! ட்ரம்ப்பின் முடிவால் பதற்ற நிலை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து அமெரிக்க வங்கிகள் வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் ஏற்கனவே அதிகப்படியான வரியை விதித்துள்ளார்.
இந்நிலையில், ட்ரம்ப் அடுத்ததாக ஐரோப்பாவை குறிவைக்கக் கூடும் என்ற அச்சத்தினாலேயே அமெரிக்க வங்கிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை
இதனையடுத்து, நவம்பர் 5ஆம் திகதி 50 பில்லியன் டொலர்களாக இருந்த அமெரிக்காவின் தங்க இருப்பு, தற்போது 106 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதனால், பிரித்தானியாவில் தங்கத்தின் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும், ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri