அதிகாரிகளை அச்சுறுத்தினால் சரத் வீரசேகரவுக்கு பாடம் கற்பிக்கப்படும்: ஞானானந்த தேரர் எச்சரிக்கை
பொலிஸ் அமைச்சருக்கோ அல்லது ஏனைய அமைச்சர்களுக்கோ அரச அதிகாரிகளை அச்சுறுத்த முடியாது என கூட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மத்திய நிலையம் மற்றும் கூட்டு பயிற்சியாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியான ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகளை அச்சுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்துள்ளோம். இதனால் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு பாடம் ஒன்றை கற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன்.
அரச அதிகாரிகள் அனைவரும் இணைந்து அவருக்கு பாடத்தை கற்பிக்க வேண்டும். குறைந்த சுதந்திரத்துடன் வேலை செய்ய முடியாது என்றால், அரச சேவையில் பிரச்சினை இருக்கின்றது.
சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க சரத் வீரசேகர போன்ற அமைச்சர்கள் கொண்டு வந்த திட்டங்களை அவர்களே மீறி வருகின்றனர். கண்ணாடிக்கு முன்னால் சென்று முகத்தை பார்க்குமாறே கூற முடியும் என ஞானானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam