ஆரோக்கியா திட்டத்திலிருந்து விலக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான 'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் விலகுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொழிற்சங்க நடவடிக்கை
அத்துடன், நோயாளர்களுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும், பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது சங்கம் இது தொடர்பில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்ட போதிலும், அரசாங்கம் தமது கோரிக்கைகள் குறித்து சாதகமான பதிலை வழங்காமை வருத்தத்திற்குரிய விடயமாகும் எனவும் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam