காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலன்
யுவதி ஒருவர் தலையில் கருங்கல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (29) பிற்பகல் பயாகல தியலகொட பிரதேச கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பயாகல, மகொன பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் இன்று பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹல்கொட, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி செவ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரின் வாக்குமூலம்
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயாகல தியலகொட பிரதேச கடற்கரைக்கு இருவரும் வந்திருந்த நிலையில், இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதன்போது குறித்த யுவதியின் தலையில் கல்லால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் இது தொடர்பில் தனது நண்பருக்கு அறிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட யுவதியை அம்பியூலன்ஸ் மூலம் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கல்லை பொலிஸார் மீட்டு சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri