ஜெர்மனியில் புதிய பிரச்சினை! அதிகரித்துள்ள வீடுகளுக்கான பற்றாக்குறை
ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
குறிப்பாக ஜெர்மனியின் முக்கிய நகரங்களான பெர்லின் மற்றும் முனிச் ஆகிய நகரங்களில் இந்த வீடு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 2.56 மில்லியன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.
மோசமடையும் நிலை
இதன்படி, ஒரு ஆண்டுக்கு குறைந்தது 320,000 புதிய வீடுகள் வீதம் கட்டப்பட வேண்டும்.
இவ்வாறிருக்க, 2023 இல், ஜெர்மனி முழுவதும் சுமார் 294,400 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
புதிய வீடுகள் விரைவில் கட்டப்படாவிட்டால், ஜெர்மனியில் வீடு பற்றாக்குறை தொடர்ந்தும் மோசமடையும் என்பதோடு குறைந்த விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
