வவுனியாவில் ஏற்பட்ட விபத்தில் ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு
கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - கனகராயன்குளம் ஏ9 வீதியில் நேற்று (19.09.2025) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



