மட்டக்களப்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
மட்டக்களப்பு நகரில் மண்ணெண்ணெய்க்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகர் திருகோணமலை பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் இன்று (24) வழங்கப்படுவதையடுத்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 04 மணி தொடக்கம் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்வரையிலான பொதுமக்கள் கலன்கலுடன் நீண்ட வரிசையில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுவருகின்றனர்.
இந்த நீண்ட வரிசையையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் ஒருவருக்கு 500 ரூபாவுக்கு மட்டும் மண்ணெண்ணெய்யை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.