நாட்டின் முதலாவது கல்வி வலயமாக முதன்முறையாக மட்டக்களப்பு கல்வி வலயம் தேர்வு
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.
நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில்,வெளியான பரீட்சை முடிவுகளின் படி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது வலயமாக தெரிவாகியுள்ளது.