ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனது அமைச்சின் கீழ் இவ்வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி நடவடிக்கைகள்
“ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

எனவே ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படாது.
அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆனால் சில துறைகள் இன்னும் வேலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri