சேதமடைந்து காணப்படும் யாழ். வடமராட்சி - பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதி! இரத்தினசிங்கம் முரளீதரன் (photos)
யாழ். வடமராட்சி - பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி வரை சேதமுற்று காணப்படுவதாக யாழ். மாவட்ட தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க மகா சபை தலைவரும், கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான வீதியானது 30 வருட யுத்தத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ரணில் பிரதமராகவும் மைத்திரி ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் அந்த வீதிக்கான திருத்தப் பணிகள் இடம்பெற்றிருந்தன.
நடுகல் திரை நீக்கம்
ஆரம்ப தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன் வருகை தந்து நடுகல் திரை நீக்கம் செய்ததையடுத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் 32 கிலோ மீட்டரில், 16 கிலோ மீட்டர் வீதியின் திருத்த பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்ததுடன் ஒரு கிலோமீட்டர் வீதி திருத்தம் செய்வதற்கு எட்டு கோடியே இரண்டு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு தொடக்கம் வேலைகள் இடம்பெற்றாலும் கடந்த 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் குறித்த வீதியின் திருத்த வேலைகள் நிறைவுப்படுத்தப்பட்டன.
ஒரு பக்கத்தால் வேலைகள் நிறைவு பெறுகின்ற நிலையில் மறுபக்கத்தால் வீதி பழுதடைந்த நிலைமைகளே காணப்படுகிறது. கார்பட் வீதியில் பனைமரம் முளைத்திருக்கிறது, டிப்பர் வாகனம் ஒன்று பிண்ணையடி என்கின்ற பகுதியில் புதைந்து காணப்பட்டது.
குறித்த 16 கிலோமீட்டர் வீதியில் அம்பன் வைத்தியசாலையிலிருந்து இராணுவ காவலரண் வரை உள்ள 1 கிலோமீட்டர் வீதி எந்தவித சேதமும் இல்லாமல் காணப்படுகிறது.
அதேபோன்று செம்பியன்பற்றலிருந்து மருதங்கேணி சந்திவரையான கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் வீதி பழுதடையாமல் காணப்படுகிறது. ஏனைய 11 கிலோ மீட்டர் வீதியும் குன்றும் குழியும், பள்ளமும் திட்டியுமாகவே காணப்படுகிறது.
இதனால் பயணிகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகிறார்கள். எந்தவித வீதி அடையாளங்களோ அறிவுப்புக்களோ எதுவுமே காணப்படவில்லை. இதன் காரணமாக விபத்துகளும் இடம்பெற்று வருகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை
பல தடவைகள் இது விடயமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதைத்தும் குறித்த அதிகாரிகள் மெத்தனமாக செல்வதையே காண முடிகிறது.
இந்த வகையில் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவராக இருந்தாலும் வருகை தந்து பார்வையிட முடியும். குறித்த வீதி கட்டாயம் செப்பனிடப்பட வேண்டும்.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து இந்த வீதியை திருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.



கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
