பெண் ஒருவர் சமைத்துக்கொண்டிருந்த போது வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு
பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது வவுனியா நகரப்பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
இன்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த பெண் எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்த வெடிப்பின் போது எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது. இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ
இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் இது தொடர்பில் தடயவியல் பொலிஸாரின்
உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam