இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி - மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை
இலங்கையில் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிடும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க (Theshara Jayasinghe ) தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிக்கவில்லை என்றால், உலகச் சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார ஆணையம் இது தொடர்பாக செயல்பட்ட காலத்தின் அடிப்படையில் விலை உயர்வு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிவாயு விலைகள் தொடர்பான ஒரு நிலையான திட்டம் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகரித்த விலைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிக்கப்படும்.
விலைகளைக் குறைப்பதற்கு முறையான நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தின் நிலை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படக் கூடாது. இவ்வாறு மறைக்கப்படுவதால், இலங்கையில் எழும் பொருளாதாரப் பிரச்சினைகளில் பொதுமக்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனவே, இந்த நாட்டின் படித்த மற்றும் அறிவார்ந்த மக்கள் இந்த நேரத்தில் இந்த பொருளாதார நிலையை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
எதிர்காலத்தில் அதிகரித்த விலைகள் உடனடியாக குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிக்க விரும்பவில்லை.
எனினும் எரிவாயு விலையை நிலையான விலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri