எரிவாயு கொள்கலன் வெடிப்பு சாதாரணமானது! பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை: வாசுதேவ
நாட்டில் தற்போது நடந்து வரும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு நிலைமை குறித்து பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை எனவும், இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அச்சப்பட வேண்டியதில்லை. முன்னரும் இப்படியான வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. எதிர்காலத்தில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கும். ஆங்காங்கே இந்த சம்பவங்கள் நடக்கின்றன.
ஒரு வருடத்தில் கணக்கிட்டு பாருங்கள் எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும் என்று? இது எரிவாயுவை பயன்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றம் குறைந்த நிலைமை.
எமது எரிவாயு விநியோகத்தில் குறைந்த முன்னேற்றமே உள்ளது. எரிவாயு கொள்கலன்களின் முற்றிலுமான பாதுகாப்பு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கேள்வி: தரமற்ற கொள்கலன்களை மக்களுக்கு வழங்கியதால், இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறுகின்றனர்?
பதில்: இல்லை, இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அப்படியானால் ஏன் கடந்த காலத்திலும் வெடித்தன.
கேள்வி: எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பை காணமுடியும் அல்லவா?
பதில்: ஆமாம். எரிவாயு பயன்பாடு அதிகரிக்கும் போது வெடிப்புகள் அதிகரிக்கும்.
கேள்வி: தற்போது இதற்கான பொறுப்பை யார் ஏற்பது?
பதில்: விநியோகிக்கும் நிறுவனங்களுக்கே முழுமையான பொறுப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022