நினைவேந்தலை தடை செய்வது இனவாதத்தின் உச்சம்: கஜேந்திரன் காட்டம்

Sri Lanka Police Mullivaikal Remembrance Day Supreme Court of Sri Lanka Selvarajah Kajendren
By Rakesh May 14, 2024 03:13 AM GMT
Report
Courtesy: S.P Thas

வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா  என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதனைச் சொன்னாலும் அதனை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் நேற்று (13) நடைபெற்ற நிதிக் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நினைவேந்தலை தடை செய்வது இனவாதத்தின் உச்சம்: கஜேந்திரன் காட்டம் | Gajendran Accused The Police Of Being Racist

தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள்

"எமது தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால், இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அதற்கான நீதியைக் கோரும் விதமாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கின்றனர்.

அந்த இனப்படுகொலை நடந்த 2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்திய கோட்டாபய ராஜபக்சவும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளியபோது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர்பிழைத்த வரலாறு உள்ளது.

இதனை நினைவுகூரும் விதமாக மக்களுக்குக் கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் ஆலயமொன்றில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றபோது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவிச்செயலாளர் ஹரிஹரகுமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

நினைவேந்தலை தடை செய்வது இனவாதத்தின் உச்சம்: கஜேந்திரன் காட்டம் | Gajendran Accused The Police Of Being Racist

நீதிமன்ற தடை உத்தரவு

இது தான் இந்த நாட்டின் நல்லிணக்கம், மற்றைய இனங்களை, மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதனைச் சொன்னாலும் அதனை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா?

ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், பொதுமக்களை ஒன்றுகூட்டுவதும் அவர்களுக்கு உணவு, கஞ்சி பரிமாறுவதும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக் கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நினைவேந்தலை தடை செய்வது இனவாதத்தின் உச்சம்: கஜேந்திரன் காட்டம் | Gajendran Accused The Police Of Being Racist

அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் 'தன்சல்' உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதாரச் சீர்கேட்டைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களைக் கோருவார்களா?அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா?

தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? இந்த இனவாதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பொலிஸாரின் அத்துமீறல்கள் எல்லை தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றன.

கடந்த 10 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே இரண்டு பொலிஸார், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துரத்திச் சென்று உதைந்து வீழ்த்தியமையால் அவர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்திருக்கின்றார். இந்த இரு பொலிஸாரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். பொலிஸாரின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை சீண்ட வேண்டாம்: அரசுக்கு செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

தமிழர்களை சீண்ட வேண்டாம்: அரசுக்கு செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

ரணிலுக்கு கசப்பான துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்! பகிரங்க எச்சரிக்கை

ரணிலுக்கு கசப்பான துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்! பகிரங்க எச்சரிக்கை


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US