தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் தீர்வு திட்ட முயற்சி - பின்னணியில் சுவிஸ் தூதகரமா..! கஜேந்திரகுமார் கேள்வி
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையுடன் தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டிணைந்து, ஒரு தீர்வு திட்ட வரைபு முயற்சியை முன்னெடுக்கின்றது. இதற்கு முயற்சிக்கு பின்னால் சுவிஸ் தூதரகம் உள்ளதா என தமிழ் தேசிய பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்தை விரும்பும் நாடாக மாறிக் கொண்டிருக்கும் இலங்கை, ஏன் தமிழ் கட்சிகளின் பிரகடனங்களில் வரும் மாற்றங்களை ஏற்கொள்ளாது. தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து, திட்ட வரைபு முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து தீர்வு திட்ட வரைபு முயற்சியை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிவில் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், தமிழ் சட்டத்தரணி பேரவைகளுடன் மற்றைய தமிழ் கட்சிகள் இணைந்து பயணிக்குமா? என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் பேரவையை எவ்வாறு நம்பமுடியுமா? என்பது தொடர்பில் களம் நிகழ்ச்சி இன்னும் ஆழமாக ஆராய்கிறது,
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
ராஜபக்சர்கள் வெளிநாட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் எப்போது இலங்கைக்கு திரும்பும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri