யாழ்.வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் சிறந்த முடிவுகள்
வெளியான கா. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் அனுராகந்தன் விஸ்வகாந்தன் கணித பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 A சித்திகளை பெற்று மாவடட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
பொறியியல் தொழில்நுட்ப பாடத்தில் உமாபதி கிருஷாந்த் 2AB பெறுபெறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், தேசிய ரீதியில் 50 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
சிறந்த பெறுபேறு
ஹாட்லிக் கல்லூரியில் கணித பிரிவில் மொத்தமாக 10 மாணவர்கள் 3 A, சித்திகளையும், 2 மாணவர்கள் 2A B சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3A சித்திகளையும், 4 மாணவர்கள் 2A B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பொறியியல் தொழில்நுட்பத்தில் 12 மாணவர்களும், உயிரியல் தொழிலன்நுட்ப பாடத்தில் 2 மாணவர்களும், வர்த்தகத்தில் 5மாணவர்களும், கலை பிரிவில் 5 மாணவர்களும், ஏனைய பாடங்களில் ஒருமாணவனும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan