எரிபொருள் விலையேற்றத்தால் அதிகரிக்கின்றது பாண் விலை! இன்று இறுதித் தீர்மானம்
எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமையால், பேக்கரித் தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதித் தீர்மானம்
இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருள்களினதும் திருத்தப்பட்ட புதிய விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்பன நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் என இரு தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில், இன்றைய தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan