திடீரென ஏற்பட்ட எரிபொருள் வரிசைகள் - காரணம் வெளியிட்ட அமைச்சர்
எரிபொருள் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அனுமதிப்பத்திர பிரச்சினை காரணமாக சுப்பர் டீசல் எரிபொருளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருளை வெளியேற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புடன் இணைந்து பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
இதனால், டீசல் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம், பெட்ரோல் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. "தாமதத்தை ஈடுசெய்ய இன்று இரவு விநியோகம் தொடரும்" என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இன்றிரவு வரும் ஆட்டோ டீசல் எரிபொருளை நாளை இறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று பல இடங்களில் எரிபொருள் வரிசைகள் காணப்பட்டன.
கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று நீண்ட வரிசையில் காணப்பட்டதால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
