எரிபொருள் தரம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
தரமற்ற எரிபொருளின் தரம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவை 0115 455 130 அல்லது 0115 234 234 ஆகிய இலக்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மண்ணெண்ணெய்யுடன் டீசலை கலப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, எரிபொருளைக் கலந்திருந்தால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
