எகிறும் எரிபொருள் விலை.. திணறி வரும் அநுர அரசாங்கம்
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிப் பீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது எனலாம்.
குறிப்பாக அடுத்தடுத்து உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைச் சந்தித்து வருவதுடன், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் திணறலை எதிர்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தவணை வெளியீடு மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், மே 31ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், சர்வதேச எரிபொருள் நெருக்கடி காரணமாக விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடிாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் உட்பட நாட்டின் முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழச்சி,
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri