ஈரான் - இஸ்ரேல் மோதல்! இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கில் மோதல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு கிடையாது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
போதுமானளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் கோரிக்கை
எனவே, பொதுமக்கள் தேவையற்ற வகையில், எரிபொருள் நிலையங்களில் கூட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், வீடுகளில் எரிபொருளினை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள போர் நிலை காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதுடன், எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கையிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 11 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam