இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
புதிய இணைப்பு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அதேநேரம் மண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விலைத் திருத்தம்
நவம்பர் மாதம் முழுதும் நடைமுறைக்கு வரும் வகையில் அந்த திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீட்டர் ஆகியவற்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கான விலைத் திருத்தம் இன்று பின்னிரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா News Lankasri

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
