வீடுகளில் எரிபொருள் பதுக்கல்:கிளிநொச்சியில் ஒருவர் கைது
கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லீட்டர் டீசல், 950 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பதுக்கல்
இதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில்
பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுபாடு
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
