வீடுகளில் எரிபொருள் பதுக்கல்:கிளிநொச்சியில் ஒருவர் கைது
கிளிநொச்சி நகரப் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் வீடுகளுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லீட்டர் டீசல், 950 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பதுக்கல்
இதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில்
பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுபாடு
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
