எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
நாட்டில் இன்று(29.03.2023) விநியோகிக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இன்றையதினம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 6,600 லீட்டர் ஒட்டோ டீசல் 574 லோடுகளும், 6,600 லீட்டர் 92 பெற்றோல் 512 லோடுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பு
இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் பிராந்திய கிடங்குகளில் இருந்து இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
1) From 6am to 4pm today, CPSTL has dispatched 574 loads of 6,600 liters of Auto Diesel & 512 loads of 6,600 liters of Petrol 92 from its terminals & regional depots. I thank all the Employees of CPC & CPSTL that had continued to work to dispatch all deliveries recommended for… pic.twitter.com/Xh533ZOt5V
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 29, 2023
மேலும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான பாதுகாப்பை பொலிஸாரும் ஆயுதப்படையினரும் தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri