நாட்டில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வரையில் எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறுவதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொலன்னாவை முனையத்தில் இருந்து சுமார் 50 எரிபொருள் கொள்கலன் ஊர்திகளை, அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இதேவேளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் தகவலில், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் உச்சபட்ச எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
திருகோணமலையில் உள்ள எமது களஞ்சியங்களின் விநியோகப் பணிகள் உச்சபட்ச அளவில் இடம்பெறுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களில், உச்சபட்ச சேவையை வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri