உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விலை அதிகரிப்பானது உணவுப் பொதிகளை கொள்வனவு செய்து தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்தி கொள்ளும் தொழிலாளர்களுக்கு பேரடியாய் அமையும் என பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
