முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட 6 முக்கிய புள்ளிகளின் சொத்துக்கள் முடக்கம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் வங்கிக்கணக்குகள் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் காப்புறுதிகள்
முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 16 வங்கிக்கணக்குகள் உட்பட 5 ஆயுள் காப்புறுதிகளை இன்றுவரை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை 16 வங்கிக்கணக்குகள் உட்பட 5 ஆயுள் காப்புறுதிகளை இன்றுவரை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri