திருகோணமலையில் இடம்பெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் - பாட்டாளிபுரம் கிராமத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று இன்று வியாழக்கிழமை(29.05.2025) காலை இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான அனுசரணையை 'எம் கடமை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி இருந்தது.
இதன்போது, பல்வேறு வகையான நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டதோடு வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
வைத்திய சேவை
இந்த வைத்திய முகாமில், ஏராளமான பயனாளர்கள், பங்குபற்றி வைத்திய சேவையை பெற்று நன்மையடைந்தனர்.
இந்த இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில், மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை அங்கத்தவர்கள், கிராம மட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








