சர்ச்சைக்குரிய மருந்துக் கொள்வனவு மோசடியாளர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வேறு வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெலிக்கடைச் சிறைச்சாலையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் தடுத்து வைப்பு
இன்னும் சில சந்தேக நபர்கள் மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கடைசியாக கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க, மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மஹரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும்,சந்தேக நபர்களில் ஒருவர் தற்போதைக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam