பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம்
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க களஞ்சியங்களில் நெல்மூட்டைகள் நிரம்பி வழிவதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வசந்த சமரசிங்கவின் ஊழல் குற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் வசந்த சமரசிங்க, தனது தேர்தல் பிரசாரத்திற்காகப் பணம் செலவழித்த ஒரு நண்பருக்குப் பயனளிக்கும் வகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கையிருப்புகளை அரைத்து அரிசியாக்கும் டெண்டரை கையளிப்பதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க ஒரு சூட்சும முயற்சியை மேற்கொண்டிருந்தார். அமைச்சின் மட்டத்தில் செயல்படும் இந்த அரிசி மாஃபியாவால் ஜனாதிபதி கூட தவறாக வழிநடத்தப்படுகிறார்.

சில மாதங்களுக்கு முன்னதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல்லை அரைத்து அரிசியாக்குவதற்காக, வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரு விசித்திரமான டெண்டர் கோரப்பட்டது.
அந்த டெண்டர் நிபந்தனைகள் வசந்த சமரசிங்கவுக்கு நெருக்கமான ஒரு ஆலை உரிமையாளரைக்குச் சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
குறித்த அரைக்கும் ஆலை உரிமையாளர், முன்னர் பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் என்பதுடன், கடந்த முறை வசந்த சமரசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு நிதிப் பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.
இந்த ஊழல் செயல்முறைக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளித்திருந்தோம். எனினும் முறைப்பாடு அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அரசாங்கம் சம்பந்தப்பட்ட டெண்டரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தது.

அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்திய குறித்த ஆவணங்களில், வசந்த சமரசிங்கவின் பல்கலைக்கழக நண்பரான கோசல வில்பாவ என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.
அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக விலைக்கு விற்பனை
“ஜாதிக சதொச” என்ற பெயரில் புதிய அரிசி ரகமொன்றை அறிமுகப்படுத்தப்பட்டதாலும், நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு அரிசியை விற்கும் முயற்சியாலும், தற்போது களஞ்சியங்களில் நெல் கையிருப்புகள் வீணாகத் தொடங்கியுள்ளன.

வேறுவழியில்லாத நிலையில் பியர் உற்பத்திக்கு குறித்த நெல் கையிருப்புகளை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதுவும் தோல்வியடைந்துவிட்டது.
இது தொடர்பாக பியர் உற்பத்தி நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அந்த நிறுவனங்கள் கூட இந்த நெல்லைப் பெற மறுத்துவிட்டது என்றார்.
you may like this video
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan