ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது
ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவரை கந்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறி்த்த கைது நடவடிக்கை கந்தர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும்சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan
