இலங்கையில் தாதி ஒருவருக்கு ஒரு பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் தாதியாக பணி புரியும் குறித்த பெண்ணுக்கு, இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
நான்கு குழந்தைகள்
பல வருடங்களாக குழந்தை இல்லாத குறித்த பெண் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த நான்கு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் தாயாருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பது கண்டறியப்பட்ட தருணத்தில் இருந்து சுகப்பிரசவத்திற்காக கடுமையாக முயற்சித்துள்ளனர்.
எனினும் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகள், தற்போது குறைமாதப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நான்கு குழந்தைகளும் ஆரோகியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri