கெசெல்வத்த பவாஸ் படுகொலை! - நால்வர் கைது
பாதாள உலக பிரமுகர் கெசெல்வத்த பவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் நான்கு வாள்கள் மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் கெசெல்வத்த பவாஸ் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்டவர் 33 வயதான மொஹமட் கமில் மொஹமட் ஃபவாஸ் என அறியப்பட்டதுடன், அவர் கொழும்பு 12 இல் வசிக்கும் "கெசல்வத்தே ஃபவாஸ்" எனவும் அடையாளம் காணப்பட்டார்.
குற்றக் குழுக்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார், ‘கெசல்வத்த தினுக’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த கொலையை செய்வதற்காக கொலையாளிகள் காரில் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri