பளையில் சட்டவிரோத மண் அகழ்வு: நால்வர் கைது (Photos)
பளை - வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022) நடந்துள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வு
சட்டவிரோதமாக மண் அகழப்படுவதால் பளை பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை பிரதேச மக்களால் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள்
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றி வளைப்பின் போது 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி 4 உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி மாவட்ட
நீதவான் முன்னிலையில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri