பளையில் சட்டவிரோத மண் அகழ்வு: நால்வர் கைது (Photos)
பளை - வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022) நடந்துள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வு
சட்டவிரோதமாக மண் அகழப்படுவதால் பளை பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை பிரதேச மக்களால் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள்
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றி வளைப்பின் போது 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி 4 உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி மாவட்ட
நீதவான் முன்னிலையில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam