யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது (Video)
யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 50லீட்டர் கோடா 8 லீட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவல்

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட
உள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri