யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது (Video)
யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 50லீட்டர் கோடா 8 லீட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவல்
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட
உள்ளார்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
